(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான அழைப்பு சர்வதேச வலைபந்தாட்டப் போட்டியில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை அணி 47 க்கு 39 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணிக்கு இறுதி வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு வலைபந்தாட்ட வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரிட்சிக்கும் வகையில் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு அணிகளுக்கு இடையிலான அழைப்பு சர்வதேச வலைபந்தாட்டப் போட்டி கொழும்பில் நடைபெற்றுவருகின்றது.
ஆரம்பப் போட்டியில் கென்யாவிடம் தோல்வி அடைந்த இலங்கை மூன்றாம் நாளான இன்று மலேசியாவிடமும் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இலங்கை இளையோர் அணியை மாத்திரமே இலங்கை வெற்றிகொண்டது.
சிங்கப்பூரில் கடந்த வருடம் ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் மலேசியாவை கிண்ணத்துக்கான லீக் சுற்றில் 62 க்கு 59 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை அணி, இன்றைய போட்டியில் மலேசியாவின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி கண்டது.
முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 11 க்கு 9 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலையில் வகித்தபோது இலங்கை வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.
ஆனால் அடுத்த மூன்று கால் மணி நேர ஆட்டப் பகுதிகளையும் 13 க்கு 11, 12 க்கு 8, 13 க்கு 9 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிய மலேசியா போட்டியில் 47 க்கு 39 என வெற்றிபெற்றது.
அவுஸ்திரேலியாவில் தொழில்சார் கழகமட்ட வலைபந்தாட்டப் போட்டிகளில் தர்ஜினி சிவலிங்கம் விளையாடி வருவதால் இந்த அழைப்பு சர்வதேச போட்டியில் அவர் பங்குபற்றவில்லை. இது இலங்கை அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. மேலும் தடுத்தாடுவது, பந்தபரிமாற்றம், கோல்போடுவது அனைத்திலும் இலங்கை வீராங்கனைகள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.
இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற இலங்கை இளையோர் அணியுடனான போட்டியில் 83 க்கு 23 என்ற கோல்கள் அடிப்படையில் கென்யா வெற்றிபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM