(செ.தேன்மொழி , ஆர்.விதுஷா )
சித்திரை புத்தாண்டு பண்டிகை காலங்களில் இடம்பெறும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவதற்காகவும் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் 2400 பொலிசார் மேலதிகமாக கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் மாத்திரம் 800 பொலிசார் மேலதிகமாக சேவைக்கு அமர்த்தப்பட்டள்ளதுடன் சிவில் உடையிலும் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டிகைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஊடகங்களை தெளிவுப்படுத்துவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் மதுபாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டுப்பிடிப்பதற்காக 25 ஆயிரம் பரிசோதனை கருவிகள் எடுத்துவரப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்படி கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM