நமது மூக்கின் நாசித்துவாரத்தில் உள்ள முடியிழைகள், நாம் காற்றின் மூலம் உள்ளிழுக்கும் தூசு, துகள்களை வடிகட்டும் பணியை மேற்கொள்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மென்மையான சவ்வுப்படலம், நிறமற்ற திரவத்தை சுரக்கிறது.
அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, உடனே அவற்றை வெளித்தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக அளவு நீரைச் சுரக்கும்.
இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித்தள்ளுகின்றன. இதுவே தும்மல் ஆகும்.
தும்மும்போது ஏதேனும் தொற்றுக்களினால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால், அவை மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. இதனால் தும்மும்போது, ஏதேனும் ஒரு சிறிய மெல்லிய துணியால் மூக்கினை மூடிக்கொண்டு தும்ம வேண்டும்.
நாம் தும்மும்போது மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளியாகும் திரவத்தின் வடிவங்களின் அளவுகளை வரைபடமாக அமெரிக்க ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளார்கள்.
திரவத்தின் நுண்ணிய வடிவங்களின் அளவுகளை தீர்மானித்து, அவை எப்படி நோய்க்கிருமிகளை பரப்புகிறது என்று கண்டறிய முடியும் என்றும் தும்மலின் பரவலைக்கட்டுப்படுத்துவது இதன் நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM