அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்தார்.
அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி களஞ்சியசாலையானது குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு இருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த 23 ஆம் திகதி அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கபட்டதாகவும் குறித்த நிலையத்தின் களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பக்கிகளை பொலிஸ் உத்தியோகத்தர் மீது தனிபட்ட விரோதத்தில் இருக்கும் யாராவது 2 கைதுப்பாக்கிகளை எடுத்து மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
காணாமல் போன கைதுப்பாக்கி தொடர்பில் பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் விசாரனைகளை இடம்பெற்று வருவதோடு, எம்.34 என்ற வகையினை கொண்ட கைதுப்பாக்கிகளே இவ்வாறு காணாமால் போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM