வவுனியாவில்  பயணிகளை சோதனை மேற்கொள்ளும் விஷேட அதிரடிப்படையினர்

Published By: Digital Desk 4

08 Apr, 2019 | 11:19 AM
image

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றும் , நேற்று முன்தினமும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்ற பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி பயணப் பொதிகள் அடையாள அட்டைகளை சோதனை மேற்கொண்ட விஷேட அதிரடிப்படையினர் 15 நிமிடங்களின் பின்னர் செல்ல அனுமதியளித்துள்ளனர்.

நேற்று  இரவு யாழ்ப்பாணத்திலிருந்து 7.15மணியளவில் கண்டி சென்ற இ.போ.ச பஸ் இரவு 9.25மணியளவில் புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாக அமைக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கை நிலையத்தில் வழிமறிக்கப்பட்டு பயணிகளை அவர்களது பயணப்பொதிகளுடன் இறங்கிவருமாறு தெரிவிக்கப்பட்டு பயணப்பொதிகள் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் பஸ் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

பஸ்ஸில் சென்றவர்களை கீழே இறங்குமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து படையினர் எதற்காக இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்கின்றார்கள் என்ற விடயங்களை அறிவதில் பயணிகள் ஒருவருக்கிடையே பேசிக்கொண்டனர். 

எனினும் வழிமறித்த விஷேட அதிரடிப்படையினரிடம் எதற்காக இவ்வாறு வயது வேறுபாடுகளின்றி பயணிகளை கீழே இறக்கி சோதனை நடவடிக்கை மேற்கொள்கின்றீர்கள் என்ற கேட்டபோது தமது வழமையான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளனர். 

புளியங்குளம் படையினரின் சோதனை நடவடிக்கை முடிவடைந்து ஓமந்தை நொச்சிமோட்டை பாலத்தில் கடமையிலிருந்த பொலிசார் தமது சோதனை நடவடிக்கைக்காக பஸ்ஸை வழிமறித்து உட் சென்றபோது அங்கு நின்றவர்கள் புளியங்குளம் முகாம் விஷேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர் எனத் தெரிவித்ததையடுத்து பொலிசார் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41