பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73 வயதான பாக்கியம் ராமநாதன் கொலை செய்துள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை பிரித்தானிய நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கொலையாளிக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சொத்துப் பிரச்சினை காரணமாக கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
எனினும் திருமணம் செய்த நாள் முதல் கணவன், மனைவியை அடிமையாக நடத்தியுள்ளமையால் மன விரக்தி அடைந்த மனைவி, படுகையில் இருந்த கணவனை அடித்து கொலை செய்துள்ளார்.
கணவனின் கொடுமைகளை இதற்கு மேலும் பொறுக்க முடியாமையினாலும், கணவன் மீது ஏற்பட்டகோபத்தினாலும் குறித்த கொலையை செய்ததாக பாக்கியம் ஒப்புக் கொண்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு நீதிமன்றம் 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM