(வாஸ் கூஞ்ஞ)
தலைமன்னார் கிராமத்திலிருந்து கடலுக்கு படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் ஒரு மீனவரைக் காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சார்ந்த இருவர் ஒரு படகின் மூலம் கடலுக்கு மீன்பிக்கச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இதில் ஒருவர் படகுடன் இராமேஸ்வரத்துக்கு அண்மித்த இடத்தில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் இவருடன் சென்ற மற்றைய மீனவரைக் காணவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தை அறிந்து தலைமன்னார் மேற்கு கிராம மீனவர்கள் காணாமல்போன மீனவர் தொடர்பாக இரு தினங்களாக கடலில் தேடியபோதும் கண்டுபிடிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது
காணாமல்போனவர் தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த ஜேனிஸ்ரன் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த இருவரும் கடலுக்கு எதற்காக சென்றார்கள் என்ற விபரம் சரியாக தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM