கோபி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டி கூட்டத்தில் கலகலப்பு ஏற்படுத்தினார்.
லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
அந்த வகையில் நேற்று திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக, கோபிச்செட்டிப்பாளையம் அருகே அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் – பிரியா என்ற தம்பதி, தங்கள் பத்து மாதக் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என அமைச்சரிடம் கொடுத்தனர்.குழந்தையை கையில் வாங்கிய செங்கோட்டையன், அதற்கு 'ஜெயலலிதா' என்று பெயர் சூட்டினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழந்தையின் பெற்றோர், 'இது ஆண் குழந்தை' என்று அமைச்சரிடம் கூறினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர், சிரித்தபடியே குழந்தைக்கு 'ராமச்சந்திரன்' என்று பெயர் சூட்டினார்.
குழந்தை, ஆணா... பெண்ணா..? என்று அறியாமல் அமைச்சர் பெயர் சூட்டிய சம்பவம், கூடியிருந்த மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM