விடுதலைப் புலிகள் விட்டு சென்ற ஒரு தொகை தங்கத்தை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து பெருந்தொகையான தங்களை புதைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலின் அடிப்படையில் முல்லைத்தீவு முத்தையன்கட்டுப் பகுதியில் தங்கத்தை மீட்பதற்கு நடடிவக்கை எடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இறுதி யுத்தத்தின் போது குறித்த இடத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்கங்கள் புதைக்கப்பட்டுள்தாகவும் குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் காலத்தில் வங்கி சேவை இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக பொலிஸார் பெக்கோ வாகனத்துடன் குறித்த இடத்திற்கு சென்று மறைத்து வைத்துள்ள தங்கங்களை மீட்பதற்கான பணியினை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையில், முல்லைத்தீவு இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM