( செய்திப்பிரிவு )
பொத்துவில் பகுதியில் விற்பனை செய்யும் நோக்குடன் கஞ்சாப் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபரொருவர் தென் கிழக்கு கடற்படையினர் மற்றும் அறுகம்பை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு கடற்படை கட்டளை கடற்படையினர் மற்றும் அறுகம்பை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பொத்துவில் பகுதியில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 910 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செயட்யப்பட்டுள்ளதுடன், இவர் முச்சக்கர வண்டியொன்றில் கஞ்சாக்களை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தள்ளது.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை அறுகம்பை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM