யாழ்.கைதடி பகுதியிலுள்ள உணவகத்தில் கடமையாற்றும் இளைஞன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கைதடி சந்தியில் உள்ள குறித்த உணவகத்திற்கு நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இளைஞனின் பெயரை கூறி கடைக்கு வெளியே அழைத்து இளைஞன் மீது தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) தாக்கி பின்னர் தாம் கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூலாசிங்கம் ஜேசுதாஸ் (வயது 28) என்பவரே தாக்குதலுக்கு இலக்கானார். குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM