வவுனியா சின்னபுதுக்குளம் குடிமனைகளையண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக கருங்கல் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கொக்குவெளிய சின்னபுதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி நீண்ட நாட்களாக மண் அகழ்வு மேற்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (30) மதியம் 2 மணியளவில் களமிறங்கிய மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி மனோஹரா தலைமையில் சென்ற விஷேட அதிரடிப்படையினர் இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இச் சுற்றிவளைப்பின் மூலம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு மேலதிகமாக சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்ததையடுத்து மண் அள்ளும் பெகோ வாகனம் 2 , மாமடுவ மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 21,32 வயதுடைய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர்களையும் கைப்பற்றபட்ட வாகனத்தையும் மடுகந்தை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி மனோஹரா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM