தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன் 

Published By: Digital Desk 4

26 Mar, 2019 | 08:49 PM
image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு – கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பின் தரம் III இற்கு நிரந்தர நியமனம்  வழங்குவது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த 14ஆம்  திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த அமைச்சரவைத் தீர்மானத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொதுச்சேவை ஆணைக்குழுவுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்துமாறு பணிப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்களை வழங்குவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் எதிர்வரும் வருடப்பிறப்பிற்கு முன்பாக மிகத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர். திருமதி. விஜயகலா மகேஸ்வரனரால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும்  06.12.2016 திகதி அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் கிழக்குமாகாணத்தில் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கத் தீர்மானிக்கப்பட்ட 445 பேருக்கும் அதிகமானோர் காணப்பட்டமையால் மொத்தம் 811 தொண்டராசிரியர்களும் கவனத்தில் எடுக்கப்பட்டு போர் சூழலில் அவர்கள் தொண்டராசிரியர்களாகச் சேவையில் ஈடுபட்ட தகைமைகளை நிறைவு செய்த சகல ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட14.03.2019 அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37