இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சோ. கணேசமூர்த்தி திங்கட்கிழமை (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட கணேசமூர்த்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக செயற்படாமல் தூர்ந்து போயுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்குவதன் மூலம் பிரதேசத்திலுள்ள பலருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும், அதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
கணேசமூர்த்தி தற்சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி பிரதம அமைப்பாளராகவும் இருந்து செயற்பட்டு வருகிறார்.
கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ, ஆகியோரின் அனுமதியுடன் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதத்தை கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சு அலுவலகத்தில் வைத்து கடந்த வாரம் வழங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM