தற்போது இடம்பெற்று வரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக 6 ஓட்டங்களை எடுத்தபோது, ஐ.பி.எல் போட்டியில் விரைவாக 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் படைத்தார்.
ஐ.பி.எல் 2019 சீசனில் 4 வது லீக் ஆட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் நிலையில். இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
முதலில் ராஜஸ்தான் ரோயல்ஸ் நாணயசுழட்சியில் வென்று பந்து வீச தீர்மானித்து அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இந்நிலையில் கிறிஸ் கெய்ல் 6 ஓட்டங்களை எடுத்தபோது ஐ.பி.எல் போட்டியில் 4 ஆயிரம் ஓட்டங்களைத் தொட்டார். இதன்மூலம் 4 ஆயிரம் ஓட்டங்கள் அடித்த 9 வது வீரர் என்ற பெருமையையும், 2 வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன் டேவிட் வோர்னர் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 ஆயிரம் ஓட்டங்களை கடக்க கிறிஸ் கெய்லுக்கு 112 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. இதன்மூலம் அதிவேகமாக 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள நிலையில் டேவிட் வோர்னர் 114 இன்னிங்சிலும், விராட் கோலி 128 இன்னிங்சிலும், ரைனா மற்றும் காம்பீர் தலா 140 இன்னிங்சிலும் 4 ஆயிரம்ஓட்டங்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM