வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸாரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையொருவர் (பொலிஸ்) அவரது சொந்த மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.
இதன் பின்னர் இவரது மகளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணமானதன் பின்னர் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் பாலியல் ரீதியில் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
அதன் பின்னர் குறித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என்னுடன் எனது தந்தை பாலியல் முயற்சியில் ஈடுபட்டார் என கணவரிடம் தெரிவித்துள்ளார். என மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை தெரிவித்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 21ம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணால் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.
இதனையடுத்து முறைப்பாட்டின் பிரகாரம் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 21.03..2019 அன்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நேற்றையதினம் (22.03.2019) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM