தலை மன்னார் கடற்பகுதியில் வைத்து ஆயிரத்து 1547 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 3 சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
தலை மன்னார் கடற்பகுதியில் வைத்து இன்று அதிகாலை 41 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகளுடனேயே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் பீடி இலையை இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் கடத்த முற்பட்ட வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் பகுதியை சேர்ந்த 28, 30 மற்றும் 35 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக பீடி இலைகளுடன் யாழ்ப்பாண சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களிலிருந்து கடற்படையினார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இதுவரைக்கும் பெருந்தொகையான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் தொடர்ந்தும் கடற்படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM