எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி மோத வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இதனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. இதன் காரணமாக ஒரு சில சர்வதேச விளையாட்டுகளை இந்தியா நடத்த முடியாமல் போனது.
அத்துடன் இடம்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தானுடான போட்டிகளில் இந்தியா விளையாடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவில்தான் உள்ளது எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன்,
ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டுள்ளனர். 2019 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடாமல் போவது விதிமுறைக்கு மாறானது. ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடாமல் போனால் அதற்கான புள்ளிகள் எதிர் அணிக்கு வழங்கப்படும்.
இந்திய வீரர்கள் சமீபத்தில் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM