யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் சிவில் உடையில் வானில் வந்தவர்க ளால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவரின் தாயாரால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராசதுரை ஜெயந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது சம்பவம் தொடர்பாக இளம் குடும்பஸ்தரது தாயார் தெரிவித்ததாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சிவில் உடையில் ஒருசிலர் வந்தனர். அவர்களின் கையில் துப்பாக்கி இருந்தது. இந்நிலையில் அவர்கள் தம்மை பொலிஸார் எனத் தெரிவித்ததுடன் எனது வீட்டை சோதனையிட வேண்டும் எனக்கூறி சோதனையிட்டனர்.
அவ்வாறு குறித்த நபர்கள் சோதனையிட்டுக்கொண்டிருக்கும் வேளை மேலும் சிலர் வானில் அங்கு வந்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த எனது மகனை வானில் வந்தவர்கள் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
எனது மகனை எதற்காக கைது செய்கிறீர்கள் என அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள் என்னை அருகில் வரவேண்டாம் விலகிப் போங்கள் எனத் தெரிவித்தனர்.
எனது மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லையே எதற்காக அவரைக் கைதுசெய்கிறீர்கள் என நான் மீண்டும் அவர்களிடம் கேட்டபோதுஇ எனது மகனோடு மட்டும்தான் பேசவேண்டியுள்ளது எனவும் மகனை எதற்காக கைது செய்கின்றோம் என்பதெல்லாம் விசாரணைகளின் பின்னர் உங்களுக்குத் தெரியவரும் என கூறிவிட்டு எனது மகனை கைவிலங்கிட்டு வானில் ஏற்றிச் சென்றனர்.
அவ்வாறு அவர்கள் எனது மகனை கைதுசெய்து அழைத்துச்செல்லும்போது அதில் ஒரு நபர் என்னிடம் வந்து 2 மணிநேரம் கழித்து அரியாலையில் உள்ள தமது அலுவலகத்திற்கு வருமாறு கூறிச் சென்றார். அத்துடன் எனது வீட்டில் நின்ற இருமோட்டார் சைக்கிளையும் அவர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இவ்வாறு குறித்த கைது நடவடிக்கை சம்பவம் இடம்பெற்றதையடுத்து உடனடியாகவே நான் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் எனது மகன் சிவில் உடை தரித்தவர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற அடிப்படையில் முறைப்பாட்டை மேற்கொள்ளச் சென்றிருந்தேன்.
இதன்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி குறித்த முறைப்பாட்டை தாம் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்ததுடன் எனது மகனை கைதுசெய்தவர்கள் கூறிய இடத்திற்கு செல்லுமாறு என்னிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் எனது மகனை மீட்க கைதுசெய்தவர்கள் கூறிய இடத்திற்குச் சென்றிருந்தேன். இதன்போது அங்கு எனது மகனை கைதுசெய்ய வந்தவர்களில் ஒருவர் நின்றார். அவரிடம் எனது மகன் எங்கே என வினவியபோது, எனது மகனை வாகனத்தில் தாம் வைத்திருப்பதாகவும் அவரை பார்க்கமுடியாது எனவும் மறுநாள் என்னை வவுனியாவிற்கு வருமாறு கூறி தொலைபேசி இலக்கம் ஒன்றையும் தந்திருந்தார்.
குறித்த நபர் கூறியதற்கு அமைய மறுநாள் வவுனியா சென்று அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதன் பின்னர் அவர்கள் தந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை மேற்கொண்டேன். தொலைபேசியில் உரையாடிய ஒரு நபர் என்னை நிற்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிறுவீதி பகுதி ஊடாக வருமாறும் அவ்வாறு வந்தால் அலுவலகம் காணப்படும் எனவும் தெரிவித்தார். அவர் கூறியதற்கு அமைய அந்த அலுவலகத்திற்கு சென்று எனது மகன் எங்கே என அங்கு நின்ற அதிகாரியிடம் கேட்டபோது, எனது மகனை பூசாவுக்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறினார் என குறித்த தாய் தெரிவித்தார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு புனர்வாழ்வின் பின்னர் குடும்பத்தாருடன் இணைந்திருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM