வசந்த கரன்னாகொட மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜர்!

Published By: Vishnu

19 Mar, 2019 | 10:06 AM
image

முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட இன்று மூன்றாவது முறையாகவும் குற்றப் புலானாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பாகவே இவரிடம் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவர் சி.ஐ.டியில். ஆஜராகியுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை  8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி.யினர் 13 ஆம் திகதி  மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வக்கு மூலம் பெற்றனர்.

அதன்படி அத்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் குறித்த சம்பவம் தொடர்பில் 14 மணிநேர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் மீள விசாரிக்க எதிர்பார்ப்பதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையிலேயே அவர் மீண்டும் இன்று காலை சி.ஐ.டி.யில் ஆஜராகியுள்ளார்.

கடந்த விசாரணைகளின் போது வசந்த கரன்னாகொடவிடம் 11 பேர் உள்ளடங்கும் இந்த ஐவரையும் கடத்தியமை மற்றும்  சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பில்  அறிந்திருந்தும் அதற்கு எதிராக செயற்படாமை தொடர்பில் விஷேடமாக விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55