(இராஜதுரை ஹஷான்)
வரவு செலவுத் திட்டத்தை வெற்றிக் கொள்ளவே அரசாங்கம் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கப்பமாக ஆடம்பர வீடு, சொகுசு வாகனங்களை வழங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஆடம்பர வீடு, சொகுசு வாகனங்கள் என்பவை அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பிரதான காரணம் என்ன? கூட்டமைப்பினருக்கு வசதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக் கொள்ளவே இவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் சம்பந்தனும் இன்று எங்களை போன்று பாராளுமன்ற உறுப்பினரே இவருக்கு மேலதிக பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM