நியூஸிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள டியூன்டின் என்ற விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மர்ம பார்சல் ஒன்றினால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வாசல் ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க உடனடியாக பொலிஸார், மோப்ப நாய்களுடனும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் விமான நிலையத்துக்கு விரைந்தது சென்று சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் நகரில் இருந்து டியூன்டின் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரு விமானங்கள் அருகாமையில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இங்கிருந்து செல்ல வேண்டிய சுமார் 300 பயணிகளுக்கு நாளை மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், விமான நிலையத்தில் சோதனை நடப்பதால் அருகாமையில் இருக்கும் 86-வது தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.
கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து இந்த மர்ம பொதி விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM