அசிதிசி ஊடகத்துறை புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

Published By: Digital Desk 4

15 Mar, 2019 | 07:11 PM
image

நாட்டில்  வெகுஜன ஊடகவியலாளர்களின் தொழிற் தரத்தினை உயர்த்தும் நோக்குடன் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள 'அசிதிசி' ஊடக புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (15) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தன நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நாடு தழுவிய ரீதியல் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலமைப் பரிசிலை வழங்கி வைத்தார்.

இலங்கையில்  அங்கீகாரம் பெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையாற்றும் ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் கடந்த வருடம் ஜுலை மாதம் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைவாக ஊடகத் துறை அமைச்சில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இப்புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகத்துறை சார் கற்கை நெறிகள், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள், டிப்ளோமாக் கற்கை நெறிகள் உள்ளிட்ட நீண்ட கால மற்றும் குறுகிய கால சான்றிதழ் கற்கை நெறிகள் போன்றவற்றுக்காக இப்புலமைப் பரிசில் நிதி உதவித் தொகையாக வழங்கப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் கற்கை நெறிகளுக்கமைவாக அதி கூடிய புலமைப் பரிசில் தொகையாக இரண்டு இலட்சம் ரூபா முதல் கற்கை நெறிகளின் கால அளவுகளுக்கேற்ப இப்புலமைப் பரிசில் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இப்புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வின்போது வடக்கு-கிழக்கு உள்ளிட்ட நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன், ஊடகத்துறை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர உள்ளிட்ட ஊடகத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59