இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்வதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து 2,453 பக்தர்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்து படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில், இந்தியா - இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர சிலுவைப்பாதை திருவிழா, ஆண்டு தோறும் இரண்டு நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மாலை 5 மணிக்கு, நெடுந்தீவு பங்குதந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை வழிபாடு நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க,ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை 65 விசைப் படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளில் 415 பெண்கள் உட்பட மொத்தம் 2,453 பேர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து புறப்பட்டுச் சென்றனர். இவர்களை, ராமநாதபுரம் மாவட்ட ஆளுநர் வீரராகவ ராவ் வழியனுப்பி வைத்தார்.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 6 கப்பல்களும், சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான பெரிய கப்பல் ஒன்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன், கச்சத்தீவு பகுதி முழுவதும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM