இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: R. Kalaichelvan

15 Mar, 2019 | 11:33 AM
image

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளான நிலையில்  இராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் காங்கேசன்துறை பொலிஸ் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை அடுத்து எட்டு மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் அ. ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , எட்டு மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆம் வகுப்பு படிக்கும் ஷாம் டேனியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் துரைபாண்டி இருவரது கல்வியையும் கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற  வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை குறித்த படகு விபத்தில் இராமேஸ்வரத்தை சேர்ந்த முனுசாமி எனும் மீனவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41