இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றன.
இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்க தொடரின் இறுதியும் ஐந்தாவதுமான போட்டி இன்று டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடுத்தாடுவதற்கு தீர்மானித்தது, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.
273 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 35 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.
இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 56 ஓட்டத்தையும், தவான் 12 ஓட்டத்தையும், விராட் கோலி 20 ஓட்டத்தையும், ரிஷாத் பந்த் மற்றும் விஜய் சங்கர் தலா 16 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 46 ஓட்டத்தையும், கேதர் யாதவ் 44 ஓட்டத்தையும், மொஹமட் ஷமி 3 ஓட்டத்தையும், குல்தீப் யாதவ் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் பும்ரா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் சம்பா 3 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ், ரிச்சட்ர்சன் மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் நெதன் லியோன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சொந்த மண்ணில் இந்திய அணியையும் தலைகுனிய வைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM