மீட்க்கப்பட்டது வைரக்கல்லா? - பரிசோதனைகள் தீவிரம்!

Published By: Vishnu

12 Mar, 2019 | 05:02 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொள்ளையிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்க்கப்பட்ட வைரக்கல்லாது உண்மையில் வைரம் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

மஹரகம பகுதியில் அங்கீகாரம் பெற்ற மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் பொலிஸ் குழு போன்று வேடமிட்டு அத்துமீறி நுழைந்து 700 கோடி ரூபா பெறுமதியான வைரம் மற்றும் மாணிக்கங்கள் கொள்ளையிடப்பட்ட நிலையில், அவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

இந் நிலையில் இவ்வாறு மீட்க்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான 750 கரட் வைரக் கல் உண்மையில் வைரம் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வைரம் எனக் கூறப்படும் கல்லை பேலியகொட மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபைக்கு அக் கல்லின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபருடன் எடுத்துச் சென்று நடத்திய  பரிசோதனைகளை அடுத்தே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. 

இதன்போது அக்கல்லை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள அந்த அதிகார சபையின் மூன்று விஷேட நிபுணர்கள் அடங்கிய குழு, குறித்த கல் வைரம் இல்லை எனவும் அது பளிங்கு கல் வகையினைச் சேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். 

எனினும் அதன் மேலதிக ஆய்வுக்கு குறித்த கல்லை சிறிது சேதப்படுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ள நிலையில் பொலிசார் அதற்கு இணக்கம் தெரிவிக்க மருத்ததையடுத்து மேலதிக ஆய்வுகள் இடம்பெறவில்லை என மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபை தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போது 500 கோடி ரூபா பெறுமதியான வைரம் எனக் கூறப்படும் குறித்த கல்லை மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06