ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு தமிழர்களின் விடுதலைக்காக நாளை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பா.ம.க.வின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கை கோர்ப்பார்கள் என்று பா. ம.க. வின் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் நாளை 9ஆம் திகதி சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
குறித்தப் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவளிக்கும் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதில் சட்ட ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எந்தச் சிக்கலும் இல்லை. எந்தத் தடையும் இல்லை.
7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. அதனடிப்படையில் தான் தமிழக அமைச்சரவையும் 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
அதன்பின் 181 நாட்களாகி விட்ட நிலையில், அதன் மீது இன்று வரை ஆளுநர் மாளிகை முடிவெடுக்காததன் பின்னணிக் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. 7 தமிழர் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் பா.ம.க. முயன்று வருகிறது.
இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் நான் நேரில் வலியுறூத்தியுள்ளேன். அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கான 10 கோரிக்கைகளில் ஒன்றாக 7 தமிழர்கள் விடுதலையும் சேர்க்கப்பட்டுள்ளது. வண்டலூர் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தியதுடன், அதற்கான மனுவையும் அளித்தேன்.
7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பா.ம.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் தென்படத் தொடங்கியுள்ளன.
வெகுவிரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பா.ம.க. நம்புகிறது. 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பா.ம.க. தொடர்ந்து பாடுபடும் வெற்றி பெறும்.
பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட இருப்பது குறித்தும், அப்போராட்டத்தில் பா.ம.க. கலந்து கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் என்னை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அப்போதே குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மனித சங்கிலிப் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவை தெரிவித்திருந்தேன். அதன்படி, சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய தமிழக நகரங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மாலை நடைபெறவுள்ள மனித சங்கிலியில் பா.ம.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கைக்கோர்ப்பார்கள்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM