நகைச்சுவை நடிகை கோவை சரளா இன்று கமல்ஹாசனை சந்தித்து, அவரது மக்கள் நீதி மையத்தில் இணைத்துக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பல இடங்களை பார்த்து இருக்கிறேன். எந்த இடத்திற்கு போவது என்று தெரியாமல் அப்படியே நின்றுகொண்டிருக்கும்போது, இந்த இடம் நல்லதாக தெரிந்தது. அதனால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். போகிற போக்கைப் பார்த்தால், மக்கள் நீதி மையம், மகளிர் நீதி மையமாக மாறிவிடும் என்று நினைக்கிறேன்.
பெண்கள் வீட்டின் கண்கள் என்பார்கள். இனிமேல் அந்த கதையெல்லாம் இருக்கவே கூடாது. நாம் சோறு ஆக்கி கொடுப்போமா. ஆண்கள் உட்கொண்டு விட்டு சென்று ராஜ்ஜியம் பண்ணுவார்களாம். இனிமேல் விடுவோமா... பெண்கள் நாட்டின் கண்களாக இருக்க வேண்டும். சக்தி இல்லையேல் சிவம் இல்லை.
ஆண் பெண் என இருவரும் இணைந்து செயற்பட்டால், இந்த நாடு நலம் பெறும் என்பது உறுதியாகிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் பல இடங்களில், பல சூழல்களில், நாம் அழிந்தும், மலிந்தும் போய் விட்டோம். இனி அந்த நிலை நமக்கு வரக்கூடாது.
ஆகவே வரும் தேர்தலில் அதிக பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற செய்ய வேண்டும். பெண்கள் நினைத்தால் ஏன் முடியாது? நம்ம ஊர் ஆண்கள் நம்மை மீறி போய் விடுவார்களா..? மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஓட்டுப் போடு..! என்று நாம் சொன்னால், ஏன் நடக்காது என்கிறேன்.
பெண்கள் நாம் இறங்கி தமிழ்நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன . ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் நீதி மையம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பல சாதனைகளை கமல் செய்திருக்கிறார்.
இத்தனை ஆண்டு காலம் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு சேவை செய்வதற்காக நான் என்னை மக்கள் நீதி மையம் கட்சியில் இணைத்துக் கொண்டேன்.
சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து என்ன கிழிப்பார்கள் என்றார்கள். சினிமாவில் நடித்தால் மட்டுமே ஒரு மனிதனின் உண்மையான மனோநிலையை புரிந்து கொள்ள முடியும்.
பிச்சைக்காரராக நடித்தால் அதன் மனநிலை என்ன என்பதை உணர முடியும். ஆகையால் தமிழக மக்கள் மனநிலை என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தலைவர் நடிப்பு வேலையை பார்த்தது போதும். இந்த வேலையை பார் என்று உத்தரவிட்டதால் வந்துவிட்டேன்.
முன்பு தலைவருக்கு ஒரு வார்த்தை கொடுத்திருந்தேன். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் ,எந்த இடத்திற்குச் சென்றாலும், அங்கு உங்கள் பின்னால் நாங்கள் பல பேர் இருப்போம் என்று சொல்லி இருந்தேன். ஆகையால் தான் இப்போது அவர் நடக்கும் பாதையில் நாங்கள் பின்னால் செல்ல தயாராக இருக்கிறோம்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM