மஸ்கெலியா பிரதேச சபையால் சிவனொளிபாத மலைக்கு பிரவேசிக்கும் வாயிலில் ‘சிவபாதம்’ எனப் பெயரிடுவதாக எடுக்கப்பட்ட முடிவை உடன் இடை நிறுத்தும் படி மத்தியமாகாண ஆளுநர் மைந்திரி குனரத்ன உத்தரவிட்டுள்ளார்.
எந்த ஒரு தரப்பினருடனும் கலந்துரையாடாது மேற்படி பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடன் இடை நிறுத்தும் படியும் அவர் அறிவித்துள்ளார்.
ஊடகங்கள் மூலம் தாம் இதனைத் தெரிந்து கொண்டதாகவும் அதன் பின் இது விடயமாகத் தேடிப்பார்த்த போது அரச நிறுவனங்கள் அல்லது தொடாபுடைய அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காது தனி முடிவில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே உள்ளுராட்சி மாகாண சபை ஆணையாளர் ஊடாக இது விடயமாக மஸ்கெலிய பிரதேச சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த வருடம் தெல்தெனியாவில் இடம்பெற்றது போன்ற இனமுரண்பாடுகளை மேலும் மத்திய மதாகாணத்தில் ஏற்படுத்த தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் இவ்வாறு இன முருகல்களுக்கு வழி சமைக்கும் விடயங்களில் அவதானம் வைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்தாலோசித்தே தேவைப்படுமிடத்து மாற்றங்கள் செய்ய முற்படுதல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM