எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஹாங்ஜோவ் நகரில் நடக்கும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு ஆசிய ஒலிம்பிக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை.
கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது குறித்து ஆசிய ஒலிம்பிக் நிர்வாகம் நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் 2022 ஆம் ஆண்டு ஹாங்ஜோவ் நகரில் நடக்கும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
எனினும் இப் போட்டி 50 ஓவர் போட்டியா அல்லது 20 ஓவர் போட்டியா என்பது இன்னும் உறுதிசெய்யவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM