ஹசிஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

Published By: Daya

01 Mar, 2019 | 12:33 PM
image

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில்  ஹசிஸ் போதைப்பொருளுடன் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேலியகொடை வடக்கு குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொட, ஹொரண மற்றும் முனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 7.8 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 600 கிராம் ஹசிஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் இருந்து விமான தபால் மூலம் பொதியில் அனுப்பப்பட்ட பொருட்களுக்குள்ளேயே குறித்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்புபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57