பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் சரிந்த நிலையில் மரணித்த சம்பவம் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.
நேற்று புதன்கிழமை 27.02.2019 இரவு நேர இஷாத் தொழுகை இடம்பெற்றபொழுது, ஏறாவூர் அல்முனீறா பெண்கள் பாடசாலை வீதியை அண்மித்து வசித்து வந்த உமர்லெப்பை மஹ்மூது லெப்பை என்ற வயது 76 என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
சம்பவம் பள்ளிவாசலின் சிசிரிசி கமராவில் பதிவாகியுள்ளது.
மேற்படி சம்பவம், பள்ளிவாசலில் தொழுகை நடாத்தும் மார்க்க அறிஞர் தொழுகை நடாத்திக் கொண்டிருக்கும்போது ஏனைய தொழுகையாளிகளுடன் இரண்டாவது வரிசையில் நின்று தொழுது கொண்டிருந்த மேற்படி வயோதிபர் திடீரென சரிந்து நிலத்தில் சாய்ந்துள்ளார்.
பின்னர், வரிசையில் நின்ற ஏனைய தொழுகையாளிகள் தம் தொழுகை முடிந்து வயோதிபரைத் தூக்கி முதலுதவி அளிக்க முற்பட்டபொழுது அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரணித்தவர், 6 பெண் பிள்ளைகளின் தந்தையாரென்றும், 25 வருட காலம் மத்திய கிழக்கில் சாரதியாகத் தொழில் புரிந்தவர் என்றும் இறுதித் தறுவாய் வரை இவர் தேகாரோக்கியத்துடன் இருந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கும்போது, தொழுகையாளி ஒருவர் மரணித்த முதல் சம்பவம் இதுவென பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM