இலங்கை நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் சிக்கினர்

Published By: Daya

28 Feb, 2019 | 11:26 AM
image

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு ஒரு தொகை இலங்கை நாணயத்தாள்களை கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை சிங்கப்பூருக்கு செல்ல முற்பட்டபோதே  குறித்த நபரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, நபரின் பயணப் பொதியை சோதனையிட்டபோது, சுங்க அதிகாரிகள் ஒரு தொகை இலங்கை நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதுடன் குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர். 

திருகோணமலை - தம்பலாகம் பிரதேசத்தை சேர்ந்த சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பயணியாற்றிய 46 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட நபரின் பயணப்பொதியிலிருந்து சுமார் 48 இலட்சத்து 99 ஆயிரம் ரூபா பெறுமதியான 1000 ருபா நாணயத்தாள்கள் மற்றும் 5000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த நபரை கைதுசெய்துள்ள சுங்க அதிகாரிகள் அவரிடமிருந்த நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12