முதியவரை கத்தியால் குத்தி விட்டு இளைஞன் தப்பியோட்டம்

Published By: R. Kalaichelvan

27 Feb, 2019 | 10:03 AM
image

இணுவில் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு வசித்துவரும் முதியவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்துக் காயங்களுக்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று  நண்பகல்  இடம்பெற்றது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

82 வயதுடைய முதியவரே கத்திக்குத்துக்கு இலக்காகிக் காயமடைந்தார். அவரும் அவரது துணைவியுமே அந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் காயமடைந்த முதியவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொள்ளை முயற்சியில்லை என முதியவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர்கள் இருவர் நேற்று  மாலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் முதியவரின் வீட்டில் வேலை செய்பவர்கள். அவர்களில் ஒருவரே மதுபோதையில் முதியவரைக் குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44