பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு

Published By: Digital Desk 4

21 Feb, 2019 | 10:08 PM
image

வெள்ளப் பாதிப்பினையடுத்து தென்னிலங்கையில் பௌத்த துறவிகளால் மாணவர்கள் மற்றும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று  கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு பாடசாலையில் கல்வி கற்கின்ற சுமார் 300 மாணவர்களுக்கும் கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது குறித்த பௌத்த துறவிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடசாலைகள் மற்றும் சமூகத்திடம் கேசரிக்கப்பட்ட பொருட்களையே இன்று மாணவர்களிடம் கையளித்தனர்.

இந் நிகழ்வில் பௌத்த துறவிகள் கற்கை நிலையத்திலிருந்து  முப்பதுக்கும் மேற்பட்ட துறவிகள், கல்வி அமைச்சின் பௌத்த பிரிவுக்கான பணிப்பாளர் விஜித ஹெலகெதர கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் சேவை கால ஆசிரியர் ஆலோசகர் திருக்குமார்.ஆங்கில ஆசிரிய ஆலோசகர் சிவஞானம், பாடசாலையின் அதிபர் சுதாஸ்கரன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09