குருநகர் மீனவர்கள் இருவரைக் காணவில்லை

Published By: Digital Desk 4

20 Feb, 2019 | 08:43 PM
image

யாழ்ப்பாணம், குருநகரிலிருந்து  கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரும் இரண்டு நாள்களாக கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இவர்கள் இருவரும் அடங்குவர் என நம்பப்படுகிறது.

பாசையூரைச் சேர்ந்த 55 வயதான லியோரி பாஸ்கரன் மற்றும் 27 வயதான எல்டின் ராஜ் பிரபு ஆகியோரே மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயுள்ளனர்.

குருநகர் இறங்குதுறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (18) விசைப்படகு மூலம் இரண்டு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

நெடுந்தீவிற்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக  மீனவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் குருநகர் மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.

எனினும், குருநகர் மீனவர்கள் காணாமற்போன மீனவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் அங்கிருக்கவில்லை.

காணாமற்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளை குருநகர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடலோரப் பாதுகாப்பு படையால் இலங்கை மீனவர்கள் 25 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 25 பேரும் நாகப்பட்டினம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24