யாழ்ப்பாணம், குருநகரிலிருந்து கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் இரண்டு நாள்களாக கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இவர்கள் இருவரும் அடங்குவர் என நம்பப்படுகிறது.
பாசையூரைச் சேர்ந்த 55 வயதான லியோரி பாஸ்கரன் மற்றும் 27 வயதான எல்டின் ராஜ் பிரபு ஆகியோரே மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயுள்ளனர்.
குருநகர் இறங்குதுறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (18) விசைப்படகு மூலம் இரண்டு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
நெடுந்தீவிற்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் குருநகர் மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
எனினும், குருநகர் மீனவர்கள் காணாமற்போன மீனவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் அங்கிருக்கவில்லை.
காணாமற்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளை குருநகர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடலோரப் பாதுகாப்பு படையால் இலங்கை மீனவர்கள் 25 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 25 பேரும் நாகப்பட்டினம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM