திருட்டில் ஈடுபட்டவரை பேஸ்புக்கின் உதவியுடன் மடக்கி பிடிப்பு

Published By: R. Kalaichelvan

19 Feb, 2019 | 05:14 PM
image

முகநூலின் உதவியுடன், உணவகத்தில் திருடியவர் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யப்பட்டு, மக்களின் உதவியுடன் திருடனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் உணவக உரிமையாளர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகில் உள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு ஓடு பிரித்து உள்நுழைந்த திருடன் முதலில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் செய்றபாடுகளை நிறுத்தி விட்டு உணவகத்தினுள் இறங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணத்தையும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி,மீள்நிரப்பு அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடையின் உரிமையாளர் கடைக்குள் செயலிழக்காமல் இருந்த கமராவின் உதவியுடன் அதற்கு முதல்நாள்களில் கடைக்கு வந்திருந்தவர்கள் தொடர்பாக பார்வையிட்டார்.

முதல் நாளில் அங்கு உணவருந்த வந்தவரும் திருட்டின் போது செயற்பட்ட கமராவில் பதிவில் காணப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக இருந்ததால் முகநூலில் பதிவு செய்து அங்கு காணப்படுபவர் தொடர்பான விபரங்களை தமக்குத் தெரியப்படுத்துமாறும் இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தப் பதிவினைப் பார்வையிட்ட உடையார்கட்டைச் சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளருக்கு அறிவித்துள்ளார். உரிமையாளர் சிலருடன் அங்கு சென்றார். இவர்களைக் கண்டதும் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கவே பொதுமக்களின் உதவியுடன் பிடித்தனர்.

வாகனத்தில் கொண்டு வந்த நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19
news-image

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : 3...

2025-02-13 14:49:33
news-image

மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ்...

2025-02-13 14:48:25
news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து காயப்படுத்திய...

2025-02-13 14:56:50
news-image

கைவிடப்பட்ட நிலையில் கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம்

2025-02-13 14:55:22
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39