யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத் (13), சதீஸ்வரன் பூஜா (8) ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள வெட்டை பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வெள்ளை நிற காரில் ஆணும், பெண்ணுமாக வந்த இருவர், சிறார்களை அருகில் அழைத்து பலவந்தமாக காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் வினோத், இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியிலும், பூஜா சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்திலும் கல்வி கற்கிறார்கள்.
இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகில் இருந்த விளையாட்டிடத்திலிருந்து கடத்தப்பட்டதாக பெற்றோர் குறிப்பிட்டபோதும், வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸாரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் சாந்தை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM