முதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்

Published By: Digital Desk 4

16 Feb, 2019 | 12:18 PM
image

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் இன்று (16) அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த முதியவர் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டின் மேல் மாடியில் ஏறி கயிற்றினை போட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

முதியவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய சமயத்தில் வீட்டின் மேலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த குற்ற தடவியல் பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்களுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 68 வயதுடைய கிருபாகரன் கோபால கிருஸ்னன் என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01