“எகடசிடிமு” அங்குரார்ப்பண விழா மற்றும் கலாசார நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..

Published By: Vishnu

13 Feb, 2019 | 10:07 AM
image

“ஒருமித்து சிந்திப்போம், ஒருமித்து எழுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 71 ஆவது தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்ட “எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண விழா மற்றும் கலாசார நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல் கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு முன்னால் கோலாகலமாக இடம்பெற்றது.

தற்போது ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கி செல்வதற்கு அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற நம்பிக்கையோடு நாட்டுக்காக ஒன்றுபடுவோம் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சகல அரசியல் சக்திகளையும் ஒன்று திரட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்படுதல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி செயலகத்தின் விசேட கருத்திட்டப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மிகச் சிறப்பான முறையில் கலாசார நிகழ்வுகளுடன் இந்த அங்குரார்ப்பண விழா ஆரம்பமானதுடன், இலங்கை இராணுவத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

ஒன்றுபட்டு மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்தில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக ஒரே சிந்தனையோடு ஒன்றிணைவோம் என்ற “எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) என்ற உறுதிப்பத்திரமும் இதன்போது நாட்டுக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த பிரபல கார் ஓட்ட வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

“எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தொழிநுட்ப உபகரணங்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அதிதிகளும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, வான் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகள் உள்ளோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலின் பூர்வீக...

2023-10-02 18:20:11
news-image

இலண்டனில் கலாக்ஷேத்ரா பாணியிலான பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-10-01 18:35:44
news-image

வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்'...

2023-09-30 16:45:28
news-image

வடக்கு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும்...

2023-09-30 17:28:30
news-image

வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள்...

2023-09-30 15:15:17
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின்...

2023-09-30 13:18:36
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-30 13:16:49
news-image

யாழ். சுதுமலையில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும்...

2023-09-30 13:17:21
news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35