திஸ்ஸவுக்கு எதிரான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடித்துக்கொள்ள கால அவகாசம்

Published By: Vishnu

12 Feb, 2019 | 07:19 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இணக்கப்பாட்டுடன் முடித்துக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தல் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டு இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்தமை தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக சட்ட மா அதிபரால் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு தாக்கல் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதி மீதான குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கு பிரதிவடஹிகள் சார்பில் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட பிரதி சொலிஷ்ட்டர் ஜனரல் திலிப் பீரிஸ் மன்றுக்கு அறிவித்தார். அத்துடன் குறித்த வழக்கை நிறைவுசெய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதன்போது வழக்கின் முதல் சாட்சியாளரான பிரதமர் ரணில் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நிரோஷன் பெரேரா,  பிரதமர் வழக்கை துரிதமக இணக்கப்பாட்டுடன் முடிவுருத்திக்கொள்ள விரும்பும்போதும், அது வழக்கை முடிக்க மன்னிப்பு கோருவதன் ஊடாக முடிப்பதா அல்லது வேறு வழி வகைகள் ஊடாக முடிவுறுத்துவதா என்பது தொடர்பில்  அறிந்துகொள்ள தமது சேவை பெறுநர் ஆவலாக உள்ளதாக கூறினார்.

இந் நிலையில் மீளவும் கருத்துக்களை முன்வைத்த  சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், இது தொடர்பில்  2 ஆவது சாட்சியாளரான ஜனாதிபதியின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் கோரவுள்ளதாகவும் அதன் பின்னர் அது குறித்து தீர்மனைப்பதாகவும் அரிவித்தார்.

இதன்போது பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் மன்றில் ஆஜரான அவரது  ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, இவ்வழக்கை குறுகிய வழி முறையொன்றில் முடித்துக்கொள்ளவே தாம் எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

இந் நிலையில்  இவ்வழக்கில் இணக்கப்பாடு தொடர்பிலான முடிவை அறிவிக்க வழக்கை எதிர்வரும் மார்ச் 25 வரை நீதிபதி ஒத்தி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:12:02
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40