பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த கோரியும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை அம்சங்களை செய்து கொடுக்க வேண்டும் என கோரியும் மலையக இளைஞர்கள் அமைப்பு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் இன்று டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை அம்சங்களை செய்து கொடுக்க வேண்டும் என கோரியே, மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மக்கள் மகஜர் ஒன்றை தயாரித்து சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர், இந்திய உயர்ஸ்தானிகர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM