(எம்.எப்.எம்.பஸீர்)
மாகந்துரே மதூஷின் ஏழு முக்கிய சகாக்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தென் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மதூஷின் இலங்கை வலையமைப்பை முற்றாக முடக்கும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ள இந்த ஏழு பேரையும் தேடி இவ்விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன.
9 பேரைத் தேடி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சூரிய வெவயில் வைத்து கெசா எனும் அசேல எரங்க, சுசந்த குமார ஆகிய இருவர் தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் பாதாள உலக தடுப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது ரீ 56 ரக துப்பககி மற்றும் தோட்டாக்கள் ஹெரோயின் என்பனவும் கைப்பற்றப்பட்டன. இந் நிலையிலேயே தென் மாகாணத்தில் மதூஷுக்கு மிக நெருக்கமான மேலும் 7 பேரைத் தேடி விசாரணை தொடர்வதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM