முதல்முறையாக வெளிநாட்டில் இலங்கை பல்கலைக்கழகங்களில் கிளைகள் - ஹக்கீம் 

Published By: Vishnu

11 Feb, 2019 | 02:58 PM
image

பேராதனை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.  

இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முன்னணி பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த புதியதொரு சட்டமூலத்தை உருவாக்கவுள்ளேன். இதற்கென பிரத்தியேகமாக ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளேன். இதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன். 

கண்டி மாவட்டத்திலுள்ள யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பலவகையான பௌதீகவள பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இல்ல விளையாட்டுப் போட்டி நடாத்துவதற்கு மைதானத்தில் போதியளவு இடவசதிகள் இல்லை. இவற்றை நிவர்த்திக்கவேண்டிய கடைமைப்பாடு எனக்கு இருக்கின்றது. பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு மதில் அமைத்து பரப்பளவை விஸ்தரிக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கென முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன். அதன்பின்னர் மேலதிக ஒதுக்கீடுகளைச் செய்து விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருவேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42