கிராமம் , நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ;- பதியுதீன்

Published By: Digital Desk 4

11 Feb, 2019 | 12:57 PM
image

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

வடக்கில் உள்ள மக்கள் நீண்டகாலமாக எண்ணற்ற துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து வாழ்ந்தவர்கள். இவற்றை எல்லாம் தாண்டி வாழ்ந்துவரும் இவர்களுக்கு அன்றாட வாழ்விலே பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன .வடக்கிலுள்ள மாணவர்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கித்தவித்த போதும் கல்வியை கருத்துடன் கற்று வருகின்றனர் . 

பின் தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ,ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வளப்பகிர்வுகளில் குறைபாடுகள் இருக்கின்ற போதும் அந்த மாணவர்கள்  பரீட்சை பெறு பேறுகளில் முன்நிலை  வகிப்பதும் தேசிய ரீதியில் சாதனை படைப்பதும்  மகிழ்ச்சிக்குரியது. 

நகரப் பாடசாலைகளுக்கு கிடைக்கும் வளங்களை போன்று கிராமப்புற பாடசாலைகளுக்கும் தூர இடங்களிலும் பின்தங்கிய இடங்களிலும் அமைந்துள்ள பாடசாலைகளுக்கும்  வளங்கள் சமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உடைய நான், எனது அரசியல் வாழ்விலும் அதனை செயற்படுத்தி வருகின்றேன்.

வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பாடசாலைகள் வைத்திய , பொறியியல் மற்றும் வர்த்தக துறைகளில் அண்மைக்காலமாக பெருமளவில் கால்பதித்துவருகின்றன. நகரப்பாடசாலைகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்த பிரதேச மாணவர்களின் கல்வித்தரம் வளர்ச்சி பெற்று வருகின்றது.

கடந்த காலங்களில் கல்விக்காக இந்த பிரதேசத்தில் பெருமளவு நிதியை செலவு செய்துள்ளோம். மத்திய அரசு ,மாகாண அரசுகளின் மூலம் இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின்  கடன்களை பெற்று கல்விக்காக மூலதனமிட்டுள்ளோம். 

இவ்வாறான வளங்களை சரியாக பயன்படுத்தி மாணவர்கள் ஒழுக்கத்துடன் இணைந்த கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவனும் இலக்கில்லாமல் தமது கல்வியை தொடர்ந்தால் சிறப்பான அடைவை ஈட்ட   முடியாது.

வன்னி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன . அதே போன்று இந்த பாடசாலையிலும் பல்வேறு தேவைகள் உள்ளதாக பாடசாலை நிருவாகம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் உடனடியாக இந்த பாடசாலையின் முகப்புக்க்காக ரூபா 15 இலட்சத்தை  ஒதுக்கீடு செய்வதற்கு முடிவு செய்துள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04