சிங்கத்தை கொன்றதால் உயிர் தப்பினார் வாலிபரொருவர்:வட அமெரிக்காவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

06 Feb, 2019 | 04:36 PM
image

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி உள்ள இந்த இடத்தில் பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் கொலராடோ பகுதியில் கடந்த 4 ஆம் திகதி அன்று  காலை ஓட்டப்பந்தைய பயிற்சிக்காக வாலிபர் ஒருவர் ஓடிக்கொண்டிருந்தார். 

அப்போது ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்துள்ளார். திடீரென சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்தது.80 பவுண்ட் எடை கொண்ட ராக்கி மலைப்பகுதியைச் சேர்ந்த மலைச்சிங்கம் ஆகும். 

சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றும் தப்பிக்க இயலவில்லை. இதனால் தற்காப்பு கருதி வேறு வழியின்றி சிங்கத்துடன் போராடி அதனைக் கொன்றார். அந்த வாலிபரின் முகம் மற்றும் கைகளில் அடையாளம் தெரியாத அளவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக இந்த மலைச்சிங்கங்கள் அமைதியான குணநலன் கொண்டவை. கடந்த சில ஆண்டுகளாக இவை மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என கொலராடோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

விலங்குகளின் வாழ்விடங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வதாலும், அந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடுவதாலும் மனிதர்களை விலங்குகள் தாக்குவதாக கூறுகின்றனர். 

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதலுக்குப் பின்னர்,  இயற்கை வளத்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் அமைப்பு கூறியுள்ளது.

வடஅமெரிக்காவில் விலங்குகள் தாக்குதலில் உயிரிழப்பது மிகவும் குறைவு. கடந்த நூறு ஆண்டுகளில் 10க்கும் குறைவான நபர்களே விலங்குகளின் தாக்குதலில் இறந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right