கொட்டும் மழையின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு

Published By: Priyatharshan

04 Feb, 2019 | 12:28 PM
image

இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கொட்டும் மழையிலும், யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக முப்டைகள் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்களுடன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ஏற்றுக்கொண்டனர்.

சங்கானை கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் இசை மற்றும், மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், யாழ். மாவட்ட இராணுவத்தளபதி, அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழையுடனான காலநிலை நிலவுகின்றது.

இந்நிலையில் இன்று காலையும் பலத்த மழை பெய்தது. எனினும், கொட்டும் மழையிலும் தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'தொடர்ந்தும் நீதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம்-முள்ளிவாய்க்கால் அவலங்களை...

2025-05-18 13:28:59
news-image

மக்கள் உணர்வெழுச்சியுடன் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கொள்கைப்...

2025-05-18 13:14:07
news-image

கொழும்பிலுள்ள சமிக்ஞை கோபுரத்தில் ஏறி ஓய்வுபெற்ற...

2025-05-18 13:08:24
news-image

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் நடைபெற்ற...

2025-05-18 13:03:36
news-image

தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி...

2025-05-18 13:00:53
news-image

கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:23:32
news-image

ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற...

2025-05-18 12:53:48
news-image

யாழில் 119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

2025-05-18 12:09:35
news-image

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:21:04
news-image

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர்

2025-05-18 11:25:26
news-image

போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம்...

2025-05-18 11:53:48
news-image

யாழில். திருமணமாகி இரு வாரத்தில் பெண்...

2025-05-18 11:07:32