ராஜஸ்தான் மாநிலம் புஷ்கார் நகரில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை உள்ளூர்வாசிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முனைந்ததோடு அவரது நண்பர் மீது கடும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த ஒரு இளம்வயது பெண்ணும் அவரது ஆண் நண்பரும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்துள்ளனர். அஜ்மீர் நகரில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புஷ்கார் நகருக்கு ஒரு வாடகை மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
சம்பவத்தன்று மாலை உள்ளூரை சேர்ந்த சில சமூகவிரோதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த ஜோடியை வழிமறித்தனர். அந்த இளம்பெண்ணின் கைப்பையை பறித்ததுடன், அவரது ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தினர். இதை தடுக்க முயன்ற அவரது ஆண் நண்பரை கொலைவெறியுடன் கல்லால் தாக்கியுள்ளனர்.
தனக்கு ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தால் உண்டான திகிலில் இருந்து இன்னும் மீளாத அந்தப் பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கக்கூட இயலாத அளவில் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் காணப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM