முல்லேரியா அம்பத்தலை பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள (Maxims Holdings) நிறுவனத்தின் புதிய தேயிலை தொழிற்சாலை நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால திறந்து வைக்கப்பட்டது.
இரண்டு பில்லியன் ரூபா முதலீட்டில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தேயிலை தொழிற்சாலை கணனி மயப்படுத்தப்பட்ட நவீன களஞ்சிய தொகுதிகளையும் நவீன அலுவலகக் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. இயந்திரம் மூலமாக தேயிலை தயாரித்தல் மற்றும் பொதியிடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நவீன தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் பெற்ற திட்டமான இத்திட்டம் முக்கியமாக தேயிலை ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு உயர்மட்டத்திலான தேயிலை பொதியிடல் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து தொழிற்சாலையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார்.
Maxims Holdings நிறுவனத்தின் தலைவர் ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் வைத்தியர் சமன் வீரசிங்க உள்ளிட்ட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM